தங்கநகைக்காக குழந்தையைத் தூக்கிச் சென்ற தந்தை... கோர்ட்டில் போராடி குழந்தையை மீட்ட தாய்
மதுரை: தங்க நகைகளுக்குப் பதிலாக வெள்ளி நகைகளைப் போட்ட கோபத்தில் 9 மாத குழந்தையைத் தூக்கிச் சென்ற கணவருக்கு எதிராக கோர்ர்டில் வழக்குத் தொடர்ந்து போராடி தன் குழந்தையை மீட்டுள்ளார் மதுரைப் பெண் ஒருவர்.
மதுரை தத்தனேரி மெயின் ரோடு பாரதிநகரைச் சேர்ந்த ஜெயந்தி என்ற 23 வயது பெண்ணிற்கும், தூத்துக்குடி நாகலாபுரம் புதூரைச் சேர்ந்த டிரைவர் பழனி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் ஜெயந்திக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. பிரசவம் முடிந்து மீண்டும் கணவர் வீட்டிற்கு ஜெயந்தி திரும்பிய போது, ஜெயந்தியின் பெற்றோர் குழந்தைக்கு வெள்ளி நகைகள் அணிவித்து அனுப்பியதாகச் சொல்லப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பழனி தன் குழந்தைக்கு தங்க நகைகள் வாங்கித் தரச் சொல்லி ஜெயந்தியை வற்புறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயந்தி அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ஜெயந்தியின் பெற்றோர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பழனி, தனது 9 மாத குழந்தையை ஜெயந்தியிடமிருந்த பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைப் பிரிந்த ஜெயந்தி சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாய்ப்பால் மட்டுமே குடித்து வரும் தனது குழந்தையை மீட்டுத் தரும்படி கோரப் பட்டிருந்தது. இல்லையேல், குழந்தையின் உடல்நிலை மோசமாகி விடும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பழனியை குழந்தையுடன் கோர்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் குழந்தையுடன் ஆஜரானார் பழனி. விசாரணையின் போது, தாய்ப்பால் தராததால், தனது உடலும் தன் குழந்தையின் ஆரோக்கியமும் பாழாவதாக தெரிவித்தார் ஜெயந்தி.
அதனைத் தொடர்ந்து, குழந்தையை தாயார் வசம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும், குழந்தையின் நலம் கருதி பெற்றோர்கள் சேர்ந்து வாழ ஆலோசனையும் கூறப்பட்டது. வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணை. அன்றைய தினம் பழனி, ஜெயந்தி இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications