தடை போட்டால் சாப்பிடுவோம்.. ருசியான மாட்டுக்கறி தின்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து, ருசியான மாட்டுக்கறி தின்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள், சமூக இயக்கத்தினர், நடத்தி வருகின்றனர்.

மாட்டுக்கறி தின்று..
இந்நிலையில், இன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ருசியான மாட்டுக்கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு முழக்கம்
பின்னர், அங்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு பேனர்களை கையில் ஏந்தி முழக்கமிட்டனர்.

கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கக் கூடாது, அது மக்களின் விருப்பம். ஆர்.எஸ்.எஸ்.சின் வலதுசாரி சிந்தனையை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை உடனே நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மாட்டுக்கறி சமைத்து..
மாட்டுக்கறியை சமைத்து உண்ணும் போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என பல்வேறு வகையான போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications