கள்ளக்காதலை விடாததால் வாலிபரை வெட்டிக் கொன்றோம் - கைதான மூவர் வாக்குமூலம்
கயத்தாறு: கயத்தாற்றில் ஒருவர் கொலையான வழக்கில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் வெட்டிக் கொலை செய்தோம் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ஐசக். இவர் பட்டப் படிப்பு படித்து விட்டு விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பாப்பா. இவர்களுக்கு ஆல்வின், சாம், ஜேம்ஸ் ஆகிய 3 மகன்களும், ஷீபா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி மாலையில் ஐசக் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்ட நாற்று சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது அங்குவந்த மர்மநபர்கள் ஐசக்கை வெட்டிக் கொலை செய்து, அவரது கிணற்றில் உடலை வீசிச் சென்றனர். ஐசக்கின் மொபட்டையும் கிணற்றுக்குள் தள்ளினர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் நாய், அப்பகுதியில் உள்ள டேனியல் என்பவரது வீட்டு வாசலில் சென்று படுத்து கொண்டது. இதுதொடர்பாக டேனியல், அவருடைய அண்ணன் எட்வர்டு ராஜா, உறவினரான ரவிசங்கர் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஐசக்கை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
கைதான எட்வர்டு ராஜா என்பவர், "என்னுடைய மனைவி புஷ்பத்துக்கும், ஐசக்குக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்தது. நான் இல்லாத நேரங்களில் ஐசக் எனது வீட்டுக்கு சென்று, என்னுடைய மனைவியிடம் உல்லாசமாக இருந்து வந்தார். எனவே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு ஐசக்கிடம் பலமுறை கூறியும் அவர் மறுத்து விட்டார். இதுகுறித்து என்னுடைய தம்பி மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் ஐசக்கிடம் சென்று பேசினர். ஆனாலும் ஐசக் கள்ளத்தொடர்பை கைவிடுவதாக இல்லை.
சம்பவத்தன்று மாலையில் நான், என்னுடைய தம்பி டேனியல், உறவினர் ரவிசங்கர் ஆகிய 3 பேரும் ஐசக்கின் தோட்டத்துக்கு சென்றோம். அப்போது, ஐசக்கிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினோம். ஆனால் அவர், கள்ளத்தொடர்பை கைவிட முடியாது, உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஐசக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை இழுத்து சென்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினோம். அவரது மொபட்டையும் கிணற்றுக்குள் தள்ளினோம். கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் நாய் என்னுடைய தம்பியின் வீட்டு வாசலில் சென்று படுத்ததால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
கைதான 3 பேரையும் போலீசார் விசாரணைக்குப்பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications