சவுதியில் இறந்த தொழிலாளியின் உடல் 2 ஆண்டு கழிந்து சொந்த ஊர் வந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டிரஜினிகாந்த். போதிய மழை இல்லாத காரணத்ததால் பிழைப்பு தேடி புரோக்கர்கள் மூலம் வெளிநாடு சென்றார்.
கடந்த 2001ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள டாமம் என்ற ஊரில் வேலை கிடைத்து சென்றுள்ளார். பத்து வருடமாக உழைத்து சிறுக சிறுக குடும்பத்தை உயர்த்தி கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி அங்கு நடந்த சாலை விபத்தில் மாயாண்டி உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப சவுதி அரேபியா அரசு பணத்தை செலுத்த அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. ஆனால் அவரது உடலை கொண்டு வரும் அளவிற்கு போதிய பணமில்லாத காரணத்தால் உடல் அங்குள்ள மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாயாண்டியின் மனைவி காந்திமதி தனது கணவரின் முகத்தை கடைசியாக பார்க்கவேண்டும் என இந்திய அரசுக்கும் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பனுக்கும் உருக்கமானவேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மாயாண்டியின் உடலை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு இந்திய தூதரகம் மூலம் மாயாண்டியின் உடல் கல்குறிச்சி வந்தது. இரண்டு வருடம் கழித்து இந்தியா வந்த மாயாண்டியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications