பிளேடு வாங்கி கொண்டு டீச்சரிடம் நெருங்கிய கணவன்.. ஓட்டம் பிடித்த மக்கள்.. கடைவீதியில் ஒரே அக்கப்போர்
மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்
மயிலாடுதுறை: நடுரோடு என்றும் பார்க்காமல், பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே உள்ளது நல்லுச்சேரி கூடலூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஜான்சன் சத்தியசீலன்.. இவரது மகன் விக்டர் வினோத்குமார்.
35 வயதாகிறது.. மனைவி பெயர் புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்... இவருக்கு 37 வயதாகிறது.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

2 பிள்ளைகள்
இவர்களுக்கு கேப்ரியல் பிரின்ஸ் என்ற 9 வயது மகனும், பெர்னிக்கா சஜன் என்ற 6 வயது மகளும் இருக்கிறார்கள்.. வினோத்குமார் தினமும் தண்ணி அடிப்பவராம்.. குடித்துவிட்டு ஜூலியட்டிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதனால் தம்பதிக்குள்ளும் நிறைய தகராறு வந்து போயுள்ளது.. ஒருகட்டத்தில் வெறுத்து போன ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

தகராறு
இப்போதைக்கு சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார் ஜூலியட்.. இந்நிலையில், வழக்கம்போல் பள்ளியில் இருந்து, ஜூலியட் பஸ்ஸில் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார்... அப்போது அவரை வினோத்குமார் வழிமறித்து பேசினார்.. முன்னாடி மாதிரி இப்போது தான் இல்லை என்றும், தண்ணி அடிப்பதை விட்டுவிட்டதாகவும் மனைவியிடம் சொல்லி உள்ளார்.. மேலும், தற்போது திருந்தி விட்டதால், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது, ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று மனைவியை அழைத்துள்ளார்.

பிளேடால் கிழித்தார்
ஆனால், கணவனுடன் செல்ல ஜூலியட் மறுத்துள்ளார்.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்து ஜூலியட்டின் கழுத்தை கிழித்துள்ளார்.. இதில் ஜூலியட் வலியால் அலறி துடித்துள்ளார்.. ரத்தம் கொட்டி உள்ளது.. இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...

பிளேடு
இது தொடர்பாக செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.. இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன், திருந்தி விட்டேன் என்று வினோத்குமார் மனைவியிடம் சொன்னபோதுகூட, ஃபுல் போதையில்தான் இருந்தாராம்.. கூட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதி என்றுகூட பாராமல், குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வினோத்குமார் ஜெயிலில் உள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications