பிளேடு வாங்கி கொண்டு டீச்சரிடம் நெருங்கிய கணவன்.. ஓட்டம் பிடித்த மக்கள்.. கடைவீதியில் ஒரே அக்கப்போர்
மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்
மயிலாடுதுறை: நடுரோடு என்றும் பார்க்காமல், பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே உள்ளது நல்லுச்சேரி கூடலூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஜான்சன் சத்தியசீலன்.. இவரது மகன் விக்டர் வினோத்குமார்.
35 வயதாகிறது.. மனைவி பெயர் புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்... இவருக்கு 37 வயதாகிறது.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

2 பிள்ளைகள்
இவர்களுக்கு கேப்ரியல் பிரின்ஸ் என்ற 9 வயது மகனும், பெர்னிக்கா சஜன் என்ற 6 வயது மகளும் இருக்கிறார்கள்.. வினோத்குமார் தினமும் தண்ணி அடிப்பவராம்.. குடித்துவிட்டு ஜூலியட்டிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதனால் தம்பதிக்குள்ளும் நிறைய தகராறு வந்து போயுள்ளது.. ஒருகட்டத்தில் வெறுத்து போன ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

தகராறு
இப்போதைக்கு சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார் ஜூலியட்.. இந்நிலையில், வழக்கம்போல் பள்ளியில் இருந்து, ஜூலியட் பஸ்ஸில் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார்... அப்போது அவரை வினோத்குமார் வழிமறித்து பேசினார்.. முன்னாடி மாதிரி இப்போது தான் இல்லை என்றும், தண்ணி அடிப்பதை விட்டுவிட்டதாகவும் மனைவியிடம் சொல்லி உள்ளார்.. மேலும், தற்போது திருந்தி விட்டதால், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது, ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று மனைவியை அழைத்துள்ளார்.

பிளேடால் கிழித்தார்
ஆனால், கணவனுடன் செல்ல ஜூலியட் மறுத்துள்ளார்.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்து ஜூலியட்டின் கழுத்தை கிழித்துள்ளார்.. இதில் ஜூலியட் வலியால் அலறி துடித்துள்ளார்.. ரத்தம் கொட்டி உள்ளது.. இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...

பிளேடு
இது தொடர்பாக செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.. இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன், திருந்தி விட்டேன் என்று வினோத்குமார் மனைவியிடம் சொன்னபோதுகூட, ஃபுல் போதையில்தான் இருந்தாராம்.. கூட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதி என்றுகூட பாராமல், குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வினோத்குமார் ஜெயிலில் உள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications