எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: குவிந்த மாணவர்கள்
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை வாங்க ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகளும் சென்னை பாரிமுனையில் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்குரிய 2172 எம்.பி.பி.எஸ். இடங்கள், 12 சுயநிதி மருத்துவ கல்லூரி மூலம் கிடைக்கும் 900-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகள் இடையே கடும் போட்டி நிலவும். இந்த வருடமும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் உள்ளது.
விண்ணப்பங்கள் விற்பனை
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) சேருவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகம் சென்னை உள்ளிட்ட 19 மருத்துவ கல்லூரிகளிலும் இன்று தொடங்கியது.
குவிந்த மாணவர்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் வாங்க காலையிலேயே மாணவ-மாணவிகள் பெற்றோருடன் குவிந்தனர். காலை 10 மணிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி விண்ணப்ப படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தார். பொதுப் பிரிவினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி கூறியதாவது:
ஜூன் 2 கடைசி தேதி
19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை படிவங்கள் கிடைக்கும். ஜூன் 2-ந்தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்பிக்கப்பட வேண்டும்.
ரூ.500க்கு டிடி
மதிப்பெண் பட்டியல், ஹால் டிக்கெட், சாதிச்சான்று வேண்டுதல் கடிதத்துடன் சென்னையில் மாற்றத்தக்க ரூ.500 மதிப்பிலான டி.டி. எடுத்து கொடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.
இணையதளத்தில் விபரம்
விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் நேரில் தான் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் tn.health org.in இணைய தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். அதில் சென்று தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
ஒரே விண்ணப்பம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications