போலீஸ் வந்து கேட்டா மாடு "ஜாகிங்" போச்சுன்னு சொல்லனும்...!
சென்னை: ஜல்லிக்கட்டை முற்றிலும் நடத்த முடியாமல் போனது என்ற நிலை இந்தப் பொங்கலுக்கு ஏற்படவில்லை. பல கிராமங்களில் தடைகளைத் தகர்த்து ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளனர்.
அதேபோல மஞ்சு விரட்டு, எருதாட்டம் உள்ளிட்டவயைும் நடந்தேறியது. இதைத் தடுக்க போலீஸ் தரப்பில் லேசு பாசான முயற்சிகளும் கூட நடந்தன. ஆனால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாடுகளை வைத்து வெளியான மீம்ஸ்களும் ஜல்லிக்கட்டு களேபரத்திற்குப் போட்டியாக களை கட்டியிருந்தன.
போலீஸ் வந்து கேட்டா
இந்த மீமைப் பாருங்க.. விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை
கேட்கிற நிலையிலா இருக்காங்க போலீஸ்காரங்க!
இது ஒரு கிராமத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளையைப் பிடிக்க முயன்று சிக்கிக் கொண்ட போலீஸ்காரர் நிலையாம்.
பாஜகவின் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தடைக்கு முன்பு பாஜக தலைவர் தமிழிசையின் பேச்சும், தடைக்குப் பிந்தைய அவரது பேச்சையும் வைத்து ஒரு மீம்.
குதிரைக்கு அனுமதி... காளைக்குத் தடையா
இது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மீம்.
டேய் தம்பி அந்த கேட்டை இழுத்து மூடுடா
வேட்டையாடு விளையாடு பட வசனத்தை வைத்து பீட்டாவை விமர்சித்து எழுதப்பட்ட மீம் இது.
கடைசியா ஒரு கவிதை படிச்சுட்டுப் போங்க!
இது போகிற போக்கில் கண்ணில் பட்ட கவிதை.. "பீட்டா" காரங்களுக்குப் பிடிக்குமான்னுதான் தெரியலை!