Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 16-ந்தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Mettur Dam opened for delta irrigation

டெல்டா பாசனத்துக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி வீதமும், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக திறக்கப்படுவதால் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 692 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.02 அடியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+