எம்ஜிஆர் படப்பிடிப்பு தள திறப்பு: அரசு திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும்.. முதல்வர் உறுதி
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் பேசியுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்பு விழாவில் பேசியுள்ளார்.
சென்னைக்கு அருகே இருக்கும் மாமல்லபுரம் பையனூரில் தமிழக அரசு சார்பில் படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மிகவும் பெரிய அளவும் 15 ஏக்கரில் இந்த படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 56 அடி உயரம் உள்ள இதுதான் இந்தியாவிலேயே மிக உயரமானது ஆகும் .
இதை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் பல திரை நட்சத்திரங்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். சில முதல்வர் பழனிச்சாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், திரைத்துறையில் எம்ஜிஆர் புகழ் பெற அவர் புரட்சி நடிகராக இருந்ததே காரணம். சமூக கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றதில் திரைப்படங்களுக்கு பங்குண்டு நாகரீக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு சினிமா.
கடன் பெறாமல் படப்பிடிப்பு தளத்தை ஃபெப்சி உருவாக்கியதற்கு பாராட்டு. கலைநிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி ஃபெப்சி படப்பிடிப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டால் தயாரிப்புச் செலவு குறையும்.
திரைப்படத் துறையினருக்கும் வீடுகள் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும். ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்பு தளத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications