தேரோட்ட விழாவில் பங்கேற்றபோது அமைச்சர் சிவி.சண்முகம் திடீர் மயக்கம்! பரபரப்பு!
திண்டிவனத்தில் தேரோட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் சிவி.சண்முகம் திடீரென மயங்கி விழுந்தார்.
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனத்தில் தேரோட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் சிவி.சண்முகம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தில் உள்ள திந்திரிணிஸ்வரர் கோவில் தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துகொண்டார்.

அவர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் தேரோட்ட விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மயக்கமடைந்த அமைச்சர் சிவி.சண்முகத்துக்கு மருதத்துவர்கள் சிகிச்சையளித்தனர். கோயில் தேரோட்ட விழாவில் அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications