அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர்.. சரமாரியாக விளாசிய துரைமுருகன்!
அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.
அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தது.

தடுத்து இருக்கலாம்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார்.
[அம்மா இல்லாம இந்த பிள்ளைங்க பேசுறதையெல்லாம் கேட்கவே முடியலைங்க!]

அதிமுக போட்ட பிச்சை
5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும் எனவும், ஆனால் தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என கூறினார்.

போனால் போட்டும்..
மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும், சரி எங்கேயாவது வைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தாம் கையெழுத்து போட்டதாகவும், பிறகு முதல்வரும் கையெழுத்து போட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பலரும் கண்டனம்
அமைச்சர் கடம்பூர் ராஜுவின் இந்த கருத்து திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

நீங்கள் ஒதுக்கியிருந்தால்
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அரசு ஒதுக்கியிருந்தால் பிச்சை என எடுத்துக்கொள்ளலாம்.

தொல்லை தந்தீர்கள்
நீங்கள் தான் இடம் தராமல் தொல்லை தந்தீர்கள். நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி தானே மெரினாவில் இடத்தை பெற்றோம். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்றார்.

கீழ்த்தரமானவர்
மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 304 வாக்கில் வெற்றிபெற்ற செல்வாக்கு இல்லாத கடம்பூர் ராஜூ கலைஞரை எப்படி விமர்சிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications