அதிகாரியின் சாவில் பொய் புகார்.. வழக்கு தொடர போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: அவதூறு பரப்பும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜய பாஸ்கர்.
விவசாயத்துறை அதிகாரியான முத்துக்குமாரசாமியின் மரணத்தில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் பணி நியமனங்கள் தொடர்பான விவகாரத்தில் அவர் மனம் உடைந்தது தான் அவரது இறப்புக்கு காரணம் என்றும் புகார் கிளப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது குறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் காசநோய் திட்டத்தின் மாநில அலுவலராக பணியாற்றிய டாக்டர் ஜே.அறிவொளியின் துரதிர்ஷ்டவசமான மரணத்தைப் பற்றி சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் தவறான செய்திகளை பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகிறார்கள். பிப்ரவரி 22ம்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புற்றுநோய் ஆய்வில், அவருக்கு மிகவும் முற்றிய நிலையில் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டது.
பணி நியமனத்தின் பொருட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டதுதான் அதிகாரியின் இறப்புக்கு காரணம் என்ற வகையில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அத்தகைய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது குற்றவியல் மானநட்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மடியில் கனமில்லை மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications