அதிகாரியின் சாவில் பொய் புகார்.. வழக்கு தொடர போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: அவதூறு பரப்பும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜய பாஸ்கர்.
விவசாயத்துறை அதிகாரியான முத்துக்குமாரசாமியின் மரணத்தில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் பணி நியமனங்கள் தொடர்பான விவகாரத்தில் அவர் மனம் உடைந்தது தான் அவரது இறப்புக்கு காரணம் என்றும் புகார் கிளப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது குறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் காசநோய் திட்டத்தின் மாநில அலுவலராக பணியாற்றிய டாக்டர் ஜே.அறிவொளியின் துரதிர்ஷ்டவசமான மரணத்தைப் பற்றி சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் தவறான செய்திகளை பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகிறார்கள். பிப்ரவரி 22ம்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புற்றுநோய் ஆய்வில், அவருக்கு மிகவும் முற்றிய நிலையில் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டது.
பணி நியமனத்தின் பொருட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டதுதான் அதிகாரியின் இறப்புக்கு காரணம் என்ற வகையில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அத்தகைய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது குற்றவியல் மானநட்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மடியில் கனமில்லை மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications