பாட்னாவில் மு.க.ஸ்டாலின்: நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமையும் என பேட்டி
சென்னை: நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமைவதற்கான எடுத்துக்காட்டாக பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார்- லாலு- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வராக நாளை மீண்டும் நிதிஷ்குமார் பங்கேற்க உள்ளார்.

பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமக்கு பதிலாக மகனும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என நிதிஷ்குமாருக்கு கருணாநிதி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இன்று பாட்னாவுக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக பீகாரில் நிதிஷ்குமாரின் வெற்றி அமைந்துள்ளது; அவரது அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு பாட்னா செல்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications