ஆட்சி மாற்றத்துக்கு வியூகம் வகுப்போம்.. மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றத்துக்கு வியூகம் வகுப்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஜனநாயகம் முறையில் ஆட்சிமாற்றம் காண வியூகம் வகுப்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வு, உளுத்தம் பருப்பு நிறுத்தம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்தன. அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டன.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயகம் முறையில் ஆட்சி மாற்றம் காண வியூகம் வகுப்போம். மக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசை மாற்ற போராட்டம் தொடரும்.
மக்களின் உணவு உரிமையைப் பறித்து பட்டினி சாவு அபாயத்தை நோக்கி அதிமுக அரசு செல்கிறது. பொதுமக்களை அலைக்கழித்து ரேஷன் கடைகளை மூடுவதுதான் அதிமுக அரசின் நோக்கம்.
அதிமுக அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதை பொதுமக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். கொள்ளையில் கூட்டணி வைத்து இருப்பவர்கள் ஊரை ஏமாற்றுகின்றனர். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஆளத்தெரியாதவர்களுக்கு கோபம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications