7 தமிழர்கள் விடுதலை பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு.. ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) September 6, 2018
27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, 7 தமிழர் விடுதலையை கடந்த காலங்களில் எதிர்த்து வந்தது. இந்த நிலையில், ஸ்டாலின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications