பர்கூரில் நீரில் மூழ்கிய மகன்... காப்பாற்றப் போராடிய தாயும் மரணம்: வீடியோ
கல்குவாரியில் நீரில் மூக்ழ்கிய மகனைக் காப்பாற்றப் போராடிய தாயும் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பர்கூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பர்கூரில் கல்குவாரியில் மகன் நீரில் மூழ்கியபோது காப்பாற்றச் சென்ற தாயும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூரில் சாந்தி என்பவர் துணை துவைக்க கல்குவாரிக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடன் தன் 9 வயது மகனையும் கூட்டிச் சென்றுள்ளார். தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

இதைப் பார்த்து பதறிய சாந்தி மகனைக் காப்பாற்ற சென்றபோது அவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். ஒரேநேரத்தில் தாயும் மகனும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications