கள்ளக்காதலுக்கு இடைஞ்சல் 3வயது குழந்தையை கொன்ற கொடூர பேய்
கோவை: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து தான் பெற்ற 3வது குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் ஒரு கொடூர மனம் கொண்ட பேய். இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கம்பி எண்ணுகிறார்.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 32 இவருக்கும் கோவை செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த திவ்யா,21 என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரிவாசா ,3 என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து திவ்யா செல்வபுரத்தில் உள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு கடையில் திவ்யா வேலைக்கு சென்ற போது, அங்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், திவ்யாவை அழைத்து புத்திமதி கூறினர்.
பிரிந்து வாழும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ஒரு குழந்தைக்கு தாயான பின்பு இதுபோல் வேறொரு வாலிபருடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கண்டித்தனர்.
இதனால் திவ்யா மனவேதனை அடைந்தார். குழந்தை இருப்பதால் தானே இவ்வாறு பேசுகிறார்கள். கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக திட்டமிட்டார்.
அதன்படி நேற்று மாலை வீட்டில் வைத்து குழந்தை ஹரிவாசாவை திவ்யா அழைத்தார். பெற்ற குழந்தை என்றும் பாராமல் பெண் குழந்தையை துணியால் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொன்றார். பின்னர் குழந்தையை கட்டிலில் தூங்குவது போல் வைத்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து திவ்யாவின் தம்பி வீட்டுக்கு வந்தார். குழந்தை ஹரிவாசாவை எங்கே? என்று கேட்டார். அதற்கு திவ்யா, குழந்தை தூங்குகிறாள் என்று தெரிவித்தார். சிறுமி ஹரிவாசா அருகே அவர் சென்று பார்த்த போது எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே குழந்தையை தூக்கி கொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டது என தெரிவித்தனர். இதுபற்றி கோவை செல்வபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் தாய் திவ்யாவிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் திவ்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் தனது குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொன்று விட்டேன் என்றும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து போலீசார் திவ்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தாய் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications