முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் - தமிழக முதல்வர்
முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரை: முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை எப்போது ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். மொத்தமாக இரண்டு கட்டமாக தண்ணீர் திறக்கப்படும். ஏற்கனவே முதற்கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் தேனியில் 14 ஆயிரத்து 700 ஏக்கர் பாசனத்துக்கு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மதுரையில் இருக்கும் 43244 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர் என 45041 ஏக்கர் நிலத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
விவசாயம்,குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு. இதனால் மூலம் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய மாலை நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. இன்று தண்ணீர் திறக்க்கப்பட உள்ளது. பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2,105 கனஅடி நீர் வருகிறது.












Click it and Unblock the Notifications