புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டி: விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுவை: புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் நேற்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களை கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் ஏற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும் சீமான் அறிவித்தார்.

இந்நிலையில் புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் கூறுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் புதுவை மாநிலத்தில் மாகி, ஏனாம் பிராந்தியங்களை தவிர்த்து மற்ற 28 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஒப்புதலை பெற்று விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
தேர்தலில் தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்போம். மாகி, ஏனாம் போன்ற பிற மொழி பேசும் தொகுதிகளை அந்தந்த மொழி வழி மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு, மதுவினால் மக்கள் அடையும் இன்னல்கள் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று கூறினார்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications