இங்கிட்டு நாட்டாமை அணி, அங்கிட்டு விஷால் அணி: தூள் பரக்கும் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் களத்தில் இருப்பதால் பரபரப்பாக உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்நிலையில் வரும் 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரண்டு அணிகள் களத்தில் உள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
கடந்த 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலின்போது சரத்குமார் போட்டியின்றி சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராதாரவி பொதுச் செயலாளராக இருந்தார்.

சரத்குமார்
தற்போதைய தேர்தலில் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கான வேட்பாளரான சிம்புவை அறிவிக்க உள்ளார்களாம்.

விஜயகுமார்
சரத்குமார் அணியில் இரண்து துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் குயிலி, குண்டு கல்யாணம், தியாகு, நளினி ஆகியோர் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

விஷால்
எதிர் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், பொன்வண்ணன் அல்லது கருணாஸ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். கார்த்தி துணைத் தலைவர் பதவிக்கும், குஷ்பு முக்கிய பதவிக்கும் போட்டியிடுகிறார்களாம்.

ஆதரவு
நாடக நடிகர்கள் வசம் தான் அதிக வாக்குகள் உள்ளதால் இரு அணயினரும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டியுள்ளனர். முதல் கட்டப் பிரச்சாரத்தை முடித்த இரண்டு அணிகளும் தற்போது அடுத்த கட்ட பிரச்சாரத்தை துவங்க உள்ளன.

போட்டி
விஷால் அணியும், சரத்குமார் அணியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த போட்டியால் நடிகர் சங்க தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications