டெல்லி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் யார்? என்னென்ன செய்துள்ளார்?
டெல்லி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: டெல்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து திடீரென ராஜினாமா செய்த நஜீப் ஜங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். மேலும், அவரின் பணிகள், பொறுப்புக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
டெல்லியில் 1951ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்த நஜீப் ஜங், பின்னாளில் டெல்லியின் கவர்னராகவே நியமிக்கப்பட்டார். 65 வயதான அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதி 1973ல் ஆட்சிப் பணியில் சேர்ந்து மத்திய பிரதேசத்தில் பணியாற்றினார்.

இதுதவிர, 1994 முதல் 1999ம் ஆண்டு வரை பெட்ரோலியத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ள அவர், கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர், அதிலிருந்து ராஜினாமா செய்த நஜீப் ஜங், 2013ம் ஆண்டு ஜுலை மாதம் டெல்லியின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல் செய்து கொண்டே இருந்த நஜீப் ஜங் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications