ஓ.பி.எஸ் ஆதரவு நாமக்கல் அதிமுக எம்.பிக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு
1000 க்கு மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்கள் சார்பில், நாமக்கல் எம்.பி. சுந்தரத்திற்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பன்னீர் செல்லவத்தை ஆதரித்து நாமக்கல் எம்.பி. சுந்தரம் உரையாற்றினர்.

இதில் 1000 க்கு மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் சுந்தரத்திற்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அதிமுக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம் என சுந்தரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

விரைவில் இதுகுறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிப்போம் எனவும் அவர் கூறியிருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு நடைபெற்றுவரும் நிலையிலும், ஓ.பி.எஸ்சுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வருகிறார் சுந்தரம்.












Click it and Unblock the Notifications