For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த நாமக்கல் சுப்பிரமணியம்

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துவிட்டு விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாராம்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டுதான் வில்லங்க விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமியாக கருதப்படுவர் நாமக்கல் சுப்பிரமணியம். இதனால் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்

ஆவணங்கள் பறிமுதல்

இச்சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பின்னர் வெளிநாட்டில் இருந்து சுப்பிரமணியம் வரவழைக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார்.

நெருக்கடியில் சுப்பிரமணியம்

நெருக்கடியில் சுப்பிரமணியம்

வருமான வரித்துறை அதிகாரிகள், சுப்பிரமணியத்தை அப்ரூவராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளானார் சுப்பிரமணியம்.

சனிக்கிழமையே கடிதம்

சனிக்கிழமையே கடிதம்

இந்த நிலையில்தான் உறவினர்கள் சிலருக்கு கடிதம் ஒன்றை சனிக்கிழமையன்று அனுப்பி வைத்திருக்கிறார் சுப்பிரமணியம். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு நான் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இவர்களே காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை

தற்கொலை

இக்கடிதம் திங்களன்று உறவினர்கள் கைக்கு போகும் முன்னர் அன்று காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார் சுப்பிரமணியம். இக்கடித விவரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Namakkal Subramaniam who was Minister Vijayabaskar's close friend sent a suicide not to his relatives before suicide committed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X