உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த நாமக்கல் சுப்பிரமணியம்

உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துவிட்டு விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாராம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டுதான் வில்லங்க விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமியாக கருதப்படுவர் நாமக்கல் சுப்பிரமணியம். இதனால் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்

ஆவணங்கள் பறிமுதல்

இச்சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பின்னர் வெளிநாட்டில் இருந்து சுப்பிரமணியம் வரவழைக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார்.

நெருக்கடியில் சுப்பிரமணியம்

நெருக்கடியில் சுப்பிரமணியம்

வருமான வரித்துறை அதிகாரிகள், சுப்பிரமணியத்தை அப்ரூவராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளானார் சுப்பிரமணியம்.

சனிக்கிழமையே கடிதம்

சனிக்கிழமையே கடிதம்

இந்த நிலையில்தான் உறவினர்கள் சிலருக்கு கடிதம் ஒன்றை சனிக்கிழமையன்று அனுப்பி வைத்திருக்கிறார் சுப்பிரமணியம். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு நான் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இவர்களே காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை

தற்கொலை

இக்கடிதம் திங்களன்று உறவினர்கள் கைக்கு போகும் முன்னர் அன்று காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார் சுப்பிரமணியம். இக்கடித விவரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+