தூத்துக்குடி: தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை- மழை நின்றதால் வெள்ளம் குறைந்தது
தூத்துக்குடி: கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பதற்கான தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தூத்துக்குடியில் தயார் நிலையில் உள்ளனர். சனிக்கிழமை முதல், மழை குறைந்ததால், தாமிர பரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கும் குறைந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில், நவம்பர் 17 முதல் மழை தொடர்ந்து பெய்தது. 23ம் தேதி ஏற்பட்ட வெள்ள பெருக்கு துாத்துக்குடியை புரட்டி போட்டது. நகருக்குள் அப்போது புகுந்த வெள்ள நீர், இன்று வரை பல பகுதிகளில் அகற்றப்படவில்லை.

அதன் பின் நின்ற மழை, டிசம்பர் 1ல் மீண்டும் துவங்கியது. பலத்த மழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 'துாத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் வைரவநாதன் தலைமையில், 110 பேர் துாத்துக்குடிக்கு வந்தனர். அதே போல், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ராணுவத்தினர், கர்னல் பிரதீப்குமார் தலைமையில், 170 பேரும் வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில், வெள்ள முன்னெச்சரிக்கை கூட்டம் நடந்தது. அதில், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், சனிக்கிழமை காலை முதல், மழை பெய்வது நின்றுவிட்டது; ஞாயிறன்று வெயில் தலைகாட்டியது. தாமிரபரணியாற்றில் வெள்ளம் குறைந்தது. கன மழையோ, வெள்ளமோ ஏற்படாததால், வீரர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications