நீட் தேர்வை ஆதரித்து 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ஆதரித்து மருத்துவ கல்வி இயக்ககம் முன் நீட் ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி சென்னை மருத்துவ கல்வி இயக்ககம் முன் நீட் ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக நடந்து வந்தது. இதனை மாற்றி நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் ஆதரவு குழுவினர் மருத்துவ கல்வி இயக்ககம் முன் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது, நீட் தேர்வு தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.