போலீஸ் கெடுபிடி.. புஷ்வானமாக போன இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போலீசார் கடும் கட்டுபாடு விதித்துள்ளனர். இதனால் இளைஞர்கள் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.
நெல்லை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் நெல்லை மாவட்ட இளைஞர்கள் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளனர்.
வரும் 31ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் 2016ம் ஆண்டு விடை பெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டிற்கு நெல்லை,தூத்துக்குடியில் உள்ள விடுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தங்கும் விடுதிகளில் கேளிக்கை விருந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போலீசார் கட்டுபாடுகளை விதி்த்துள்ளனர்.
பொது இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி மூலம் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. பொது இடங்களில் வாண வேடிக்கை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு சாலைகளில் கூச்சலிட்டு செல்பவர்கள் மீதும் கடும நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும் மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் நள்ளிரவில் நடக்கும் வழிபாடுகளுக்கு எந்த வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தடை காரணமாக பலர் கையில் பணம் இல்லை. குறிப்பாக இளைஞர்களின் கைளில் போதிய பணம் இப்போது புரளவில்லை.
இதனால் அவர்கள் புத்தாண்டு கொண்டாடத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர். இந்த புத்தாண்டை எளிமையாக கொண்டாட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications