மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லை- விவசாயிகள் வேதனை
நெல்லை: மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழை பெய்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிவதால் பிசான சாகுபடியை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் ஏற்தனவே மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட நிலையில் அதற்கு போதிய விலை இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மரவள்ளி கிழக்கு சமையலுக்கு போக மிதமுள்ளவை ஜவ்வரசி, மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் தமிழக அளவில் பல்வேறு ஆலைகளுக்கு அனுப்பப்படும். இந்தாண்டு மரவள்ளி கிழங்கு பயிர் செய்த விவசாயிகள் அதை விலை இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த மரவள்ளி கிழக்கு வெளி மாவட்ட ஆலைகள் ஓரு கிலோ ரூபாய் 2 என எடுத்து கொள்வது வழக்கம். ஆனால் இவ்வாண்டு மரவள்ளிகிழங்குக்கு தேவையில்லை என ஆலைகள் வாங்க மறுத்து வி்ட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது பெய்து வரும் மழையால் கிழங்குகள் அழுகி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதை பாதுகாப்பான இடத்தில் வைக்க போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications