இது ரூ. 10 நோட்டா, இல்லை, ரூ. 110 நோட்டா... பாவம் இந்த வியாபாரியே கன்பியூஸ் ஆயிட்டாரு!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கிழித்த பத்து ரூபாய் நோட்டை வாங்கிய வியாபாரி, அதில் 110 என இருந்ததைக் கண்டு அதிரிச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழித்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண பத்து ரூபாய்க்கு போய் வங்கிக்கு செல்வதா என பலரும அலுத்து கொண்டு டேப் கொண்டு ஓட்டி ஏமாந்தவர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்.
அந்தவகையில், சங்கரன்கோவில் பகுதியில் இப்படி கிழிந்த ரூபாய் நோ்ட்டை ஓட்டிய ஒருவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. கிழித்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சேர்த்து ஓன்றாக சேர்த்து ஓட்டி விட்டார். இதனால், அந்த ரூபாய் நோட்டில் மத்தியில் உள்ள 10 ரூபாய் என்ற எண் 110 என மாறிவிட்டது.
பின்னர் அந்த ரூபாய் நோட்டை கடையொன்றில் கொடுத்து விட்டு அவர் மாயமாகி விட்டார். இந்நிலையில் இரவில் கடையை அடைக்கும் போது கணக்கை சரிபார்த்த வியாபாரி இந்த நோட்டை பார்த்து அதிரிச்சியில் உறைந்து விட்டார்.
காரணம் இரண்டு வெவ்வேறு 10 ரூபாய் நோட்டுகளை நடுவில் சேர்த்து வைத்து ஓட்டியிருந்தது தான். ஓருபக்க சீரியல் நம்பர் வேறாகவும், இன்னொரு பக்க சீரியல் நம்பர் வேறாகவும் இருந்தது. இதனால் தான் 10 பதில் 110 என ஓட்டப்பட்டு வந்துள்ளது.
பின்னர் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த வியாபாரி, இது தொடர்பாக மற்ற வியாபாரிகளிடம் கூறி அவர்களையும் எச்சரித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications