பகத்சிங், நேதாஜி, பிரபாகரன் பிறந்த ஊரின் மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் வைகோ
திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் பிறந்த மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஊரின் மண் வழங்கப்பட்டது
நேதாஜியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக சார்பில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று 23.01.2015 நடைபெற்றது.

இதில் வைகோ கலந்துகொண்டு பேசினார். மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி அவர்களும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நேதாஜி பிறந்த மண்
பிறந்தநாள் விழாவில் நேதாஜி பிறந்த ஊரின் மண்ணை வைகோவிடம் வழங்கினார் டெபி பிரசாத் புருஷ்டி.

பகத்சிங் - பிரபாகரன்
ஏற்கனவே பகத் சிங் பிறந்த ஊரின் மண்ணையும், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த வவுனியா மண்ணையும் சேகரித்து வந்து பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுபோன்று இந்த மண்ணும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று கழகப்பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
புனித மண் யாத்திரை
முன்னதாக மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி நேதாஜி பிறந்த ஊரான கட்டாக்கின் புனித மண் அடங்கிய கலசம் கடந்த 16ஆம் தேதி முதல் யாத்திரையாக பயணித்து வியாழக்கிழமையன்று சென்னை வந்தது. விமான நிலையத்தில் புனித மண்ணிற்கு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
நேதாஜி மாளிகையில்
1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள பழமையான `காந்தி பீக்' மாளிகையில் நேதாஜி தங்கியிருந்தார். இந்த மாளிகைக்கும் சென்ற வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications