பகத்சிங், நேதாஜி, பிரபாகரன் பிறந்த ஊரின் மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் வைகோ
திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் பிறந்த மண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஊரின் மண் வழங்கப்பட்டது
நேதாஜியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக சார்பில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று 23.01.2015 நடைபெற்றது.

இதில் வைகோ கலந்துகொண்டு பேசினார். மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி அவர்களும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நேதாஜி பிறந்த மண்
பிறந்தநாள் விழாவில் நேதாஜி பிறந்த ஊரின் மண்ணை வைகோவிடம் வழங்கினார் டெபி பிரசாத் புருஷ்டி.

பகத்சிங் - பிரபாகரன்
ஏற்கனவே பகத் சிங் பிறந்த ஊரின் மண்ணையும், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த வவுனியா மண்ணையும் சேகரித்து வந்து பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதுபோன்று இந்த மண்ணும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று கழகப்பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
புனித மண் யாத்திரை
முன்னதாக மனித உரிமைப் போராளி டெபி பிரசாத் புருஷ்டி நேதாஜி பிறந்த ஊரான கட்டாக்கின் புனித மண் அடங்கிய கலசம் கடந்த 16ஆம் தேதி முதல் யாத்திரையாக பயணித்து வியாழக்கிழமையன்று சென்னை வந்தது. விமான நிலையத்தில் புனித மண்ணிற்கு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
நேதாஜி மாளிகையில்
1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள பழமையான `காந்தி பீக்' மாளிகையில் நேதாஜி தங்கியிருந்தார். இந்த மாளிகைக்கும் சென்ற வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications