மாணவி அனிதா தற்கொலை.. மக்கள் கோபம்
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மீது நெட்டிசன்கள் கோபம் வெளிப்படுத்துவது ஒருபக்கம் என்றால், இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறக் கூடாது என்று ஒருபக்கமும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதுகுறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:
|
பாதிப்பு புரிகிறதா
நீட்டோட பாதிப்பே இப்பத்தான் புரிய ஆரம்பிச்சிருக்கு..அதுக்கு ஒரு உயிர காவு கொடுத்தாச்சு #RIP
|
வேறு வழியில்லையா
தலித், விவசாயிகள் குரல் கேட்கப்படணும்னா தற்கொலைய தவிர வேற வழியேயில்ல போல
|
சமூக தாக்குதல்
ஒரு குடும்பம், ஒரு பெண்ணின் கனவு மட்டும் சார்ந்த விசயமல்ல.. இது பொதுசமூகத்தின் மீதான நேரடியான தாக்குதல்.. என்ன பண்ணிருவாங்கனு ஒரு மிதப்பு.
|
பெற்றோர் அட்வைஸ் தேவை
டாக்டர் இல்லேன்னா அதைவிட அதிகமா சாதிக்க வேற துறைகள் இருக்குன்னு மத்த பசங்களுக்காவது பெற்றோர் ஆறுதலா சொல்லனும்..#Anitha
|
ஆபத்தான அரசு
செயல்படாத அரசை விட இந்த untrustworthy அரசு மிகவும் ஆபத்தானது... பொய்யான நம்பிக்கைகள், அறிக்கைகள்,பேட்டிகள். முற்றிலும் நம்பகத்தன்மையற்ற அரசு












Click it and Unblock the Notifications