லலித்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இருவரும் பேசிய முக்கிய ஆடியோவை வெளியிட்ட நிலானி!
Recommended Video

சென்னை: நடிகை நிலானியிடம், துணை இயக்குநர் லலித்குமார் ஏடிஎம் கார்டு, பாஸ்புக் கேட்டு மிரட்டும் ஆடியோக்களை நிலானி வெளியிட்டுள்ளார்.
துணை இயக்குநர் லலித்குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நிலானி காதலித்தனர். ஆனால் லலித்குமார், நிலானியை தொடர்ந்து பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் நிலானி புகார் அளித்தபிறகு, லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி திடீரென தலைமறைவானார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தற்கொலை முயற்சி
லலித்குமார் செய்த கொடுமைகளால் அவரை விட்டு விலகியதாகவும், அவர் தற்கொலைக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்றும் கேட்டார். ஆனால், லலித்குமார் சகோதரர் நிலானியை குற்றம்சாட்டினார். இதையடுத்து நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடியோ
இந்த நிலையில், லலித்குமாருடன் பேசி, நிலானி வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வெளியே நின்றபடி, நிலானியின் ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ்புக்கை வெளியே போடும்படி லலித்குமார் கேட்கிறார். அதற்கு நிலானி மறுப்பு தெரிவிக்கிறார். "ஏடிஎம் கார்டு, பாஸ்புக் தர முடியாது" என நிலானி கூற, "கீழேதான் உள்ளேன், அதை எட்டி போடு. உனக்கு என்ன ஆகிவிடும்" என்கிறார் லலித்குமார்.

பொய் முகம்
அப்போது போலீசுக்கு நிலானி போன் செய்வது போன்ற ஆடியோ கேட்கிறது. பொய்யான முகம் காட்டி ஒருவர் எனது வாழ்க்கையில் வந்தார். ஆனால் பொய் முகம் தெரிந்ததால், விலகினேன். ஆனால் தினமும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதற்காக நான் கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் செய்யுங்கள். இவ்வாறு நிலானி போலீசில் கெஞ்சுகிறார்.

இறங்க காரணம்
பின்னர் லலித்குமாரிடம், நிலானி பேசுகிறார். ஆரம்பத்தில் இருந்து நீ என்னை ஏமாற்றி வாழ்ந்து கொண்டுள்ளாய். நீ தற்கொலை செய்து கொண்டுவிட கூடாது என்பதற்காகத்தான் நான் இவ்வளவு இறங்கி வந்து கொண்டுள்ளேன் என்கிறார் நிலானி. நீ வெறும் ஏடிஎம் மற்றும் பாஸ்புக் மட்டும் கொடு என்று பதிலுக்கு விடாமல் கேட்கிறார் லலித்குமார்.

கடும் வாக்குவாதம்
இதற்கு, நிலானி, போலீசில் ஏடிஎம், பாஸ்புக் கொடுக்கிறேன். நீயே செக் செய்து கொள். உனக்கு தெரியாமல் 5000 சேர்த்து வைத்திருந்தால் கூட அதில் தெரியும் என்கிறார். அதற்கு உனக்கு போலீஸ் ஸ்டேஷன் போவது புதிதா என்கிறார் லலித்குமார். உனக்கு சிறைக்கு போறது புதுசா என்கிறார் நிலானி. நான் ஏதோ விபச்சார வழக்கில் அடிக்கடி சிறை சென்றது போல கேட்கிறாயே என்று கூறும் நிலானி, நீ ஒரு சைக்கோ, ஒருவரை 4 நாட்கள் சந்தோஷமாக வைத்திருக்க தெரியாது என்றும் கூறுகிறார். இவ்வாறு வாக்குவாதம் தொடருகிறது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications