லலித்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இருவரும் பேசிய முக்கிய ஆடியோவை வெளியிட்ட நிலானி!
Recommended Video

சென்னை: நடிகை நிலானியிடம், துணை இயக்குநர் லலித்குமார் ஏடிஎம் கார்டு, பாஸ்புக் கேட்டு மிரட்டும் ஆடியோக்களை நிலானி வெளியிட்டுள்ளார்.
துணை இயக்குநர் லலித்குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நிலானி காதலித்தனர். ஆனால் லலித்குமார், நிலானியை தொடர்ந்து பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் நிலானி புகார் அளித்தபிறகு, லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி திடீரென தலைமறைவானார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தற்கொலை முயற்சி
லலித்குமார் செய்த கொடுமைகளால் அவரை விட்டு விலகியதாகவும், அவர் தற்கொலைக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்றும் கேட்டார். ஆனால், லலித்குமார் சகோதரர் நிலானியை குற்றம்சாட்டினார். இதையடுத்து நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடியோ
இந்த நிலையில், லலித்குமாருடன் பேசி, நிலானி வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வெளியே நின்றபடி, நிலானியின் ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ்புக்கை வெளியே போடும்படி லலித்குமார் கேட்கிறார். அதற்கு நிலானி மறுப்பு தெரிவிக்கிறார். "ஏடிஎம் கார்டு, பாஸ்புக் தர முடியாது" என நிலானி கூற, "கீழேதான் உள்ளேன், அதை எட்டி போடு. உனக்கு என்ன ஆகிவிடும்" என்கிறார் லலித்குமார்.

பொய் முகம்
அப்போது போலீசுக்கு நிலானி போன் செய்வது போன்ற ஆடியோ கேட்கிறது. பொய்யான முகம் காட்டி ஒருவர் எனது வாழ்க்கையில் வந்தார். ஆனால் பொய் முகம் தெரிந்ததால், விலகினேன். ஆனால் தினமும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதற்காக நான் கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் செய்யுங்கள். இவ்வாறு நிலானி போலீசில் கெஞ்சுகிறார்.

இறங்க காரணம்
பின்னர் லலித்குமாரிடம், நிலானி பேசுகிறார். ஆரம்பத்தில் இருந்து நீ என்னை ஏமாற்றி வாழ்ந்து கொண்டுள்ளாய். நீ தற்கொலை செய்து கொண்டுவிட கூடாது என்பதற்காகத்தான் நான் இவ்வளவு இறங்கி வந்து கொண்டுள்ளேன் என்கிறார் நிலானி. நீ வெறும் ஏடிஎம் மற்றும் பாஸ்புக் மட்டும் கொடு என்று பதிலுக்கு விடாமல் கேட்கிறார் லலித்குமார்.

கடும் வாக்குவாதம்
இதற்கு, நிலானி, போலீசில் ஏடிஎம், பாஸ்புக் கொடுக்கிறேன். நீயே செக் செய்து கொள். உனக்கு தெரியாமல் 5000 சேர்த்து வைத்திருந்தால் கூட அதில் தெரியும் என்கிறார். அதற்கு உனக்கு போலீஸ் ஸ்டேஷன் போவது புதிதா என்கிறார் லலித்குமார். உனக்கு சிறைக்கு போறது புதுசா என்கிறார் நிலானி. நான் ஏதோ விபச்சார வழக்கில் அடிக்கடி சிறை சென்றது போல கேட்கிறாயே என்று கூறும் நிலானி, நீ ஒரு சைக்கோ, ஒருவரை 4 நாட்கள் சந்தோஷமாக வைத்திருக்க தெரியாது என்றும் கூறுகிறார். இவ்வாறு வாக்குவாதம் தொடருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications