21 வயதுக்கு கீழுள்ள மைனர்களுக்கு மதுபானம் கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மது பான விற்பனையை ஒழுங்குபடுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
பதிலளித்து, தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையர் அளித்துள்ள அறிக்கையில், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது அளிக்க கூடாது என மதுபான பார்கள், ஸ்டார் ஹோட்டல்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். 21 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மதுபானம் அளித்தால் அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வயது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அடையாள அட்டையை வாங்கி பார்ப்பது கட்டாயம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications