ரகசியக் கூட்டமா... எம்எல்ஏக்களா.. இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் அமைச்சர் செங்கோட்டையன்!
அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக வெளியான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக வெளியான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் யாரும் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஏற்கனவே தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, தீபா பேரவை, ஈபிஎஸ் அணி என சிதைந்து கிடக்கிறது. இதில் ஈபிஎஸ் அணியையும் ஓபிஎஸ் அணியையும் இணைப்பதற்கான பேச்சு வார்த்தையே இதோ அதோ என இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் ஈபிஎஸ் அணியின் எம்எல்ஏக்கள் 25 பேர் சென்னையில் நேற்று ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் அதிமுக 5 கோஷ்டிகளாக உடைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

செங்கோட்டையன் மறுப்பு
இந்நிலையில் அதிமுகவில் உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவு எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் சென்னையில் ரகியமாக கூடி ஆலோசனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் அதனை மறுத்தார்.

முற்றிலும் பொய்யானது
அவ்வாறு வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் செங்கோட்டையன் கூறினார். ஆட்சியையும், கட்சியையும் காப்பதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரே அணியில் இருந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் மட்டுமே பேசனும்
அதிமுக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக குழுவில் இடம்பெற்றுள்ள யாராவது ஒருவர் மட்டுமே கருத்துகளை வெளியிட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஜெயக்குமாரும் மறுப்பு
இதேபோல் அமைச்சர் ஜெயக்குமாரும் ஏம்எல்ஏக்களின் ரகசிய கூட்டம் குறித்து வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதுபோல் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications