மோடியை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்.
சென்னை: ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடியை பார்த்ததும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரை கட்டிப் பிடித்து குமுறிக் குமுறி அழுதார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காலையில் இருந்து ராஜாஜி அரங்கின் ஓரமாக அமர்ந்திருந்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மோடியை பார்த்ததும் எழுந்து வந்தார். பின்னர் அவர் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
#WATCH: PM Modi pays his last respects to #Jayalalithaa at Rajaji Hall in Chennai. pic.twitter.com/Wass8nxUpv
— ANI (@ANI_news) December 6, 2016
உடனே மோடி பன்னீர் செல்வத்தின் தோளில் கையை போட்டு ஆறுதல் கூறினார். மோடியை பார்த்ததும் சசிகலாவும் அழத் துவங்கினார். உடனே மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.
மோடி கிளம்பிய பிறகு பன்னீர் செல்வம் மீண்டும் ஒரு ஓரமாக சென்று தரையில் உட்கார்ந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications