டெண்டர் விடப்பட்ட சாலைப்பணி... அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலைமறியல்
தேனி: தேனி மாவட்டம் மல்லாபுரத்துக்கும் மயிலாடும்பாறைக்கும் இடையேயான சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், அங்கு பணியை தொடங்குவதற்கு அதிகாரிகள் போதிய அக்கறை காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தையும், தேனி மாவட்டத்தையும் இணைக்கக் கூடிய பகுதியான மல்லாபுரம் -மயிலாடும்பாறை இடையே 6 கி.மி.தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்க கடந்த ஜனவரி 19-ம் தேதி டெண்டர் விடப்பட்டது. சாலை அமைக்கப்பட உள்ள இடம் வனச்சரகத்துக்குள் வருவதால் டெண்டர் விடும் பணிகளை வனத்துறையினரே மேற்கொண்டனர். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மண்டல வன வலுவலகத்தில் வைத்து டெண்டர் விடப்பட்டது. அந்தப் பணியை மதுரையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காததால் ஒப்பந்ததாரர் இன்னும் சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. இதனிடையே தங்கள் கிராமத்திற்கு விரைந்து சாலை அமைத்து தரவேண்டும் என்றும், இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறி மல்லாபுரம் கிராமமக்கள் இன்று நண்பகல் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மல்லாபுரம்-மயிலாடும்பாறை இடையே விரைந்து சாலைபணிகளை தொடங்க வனத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன் பின்னர் போராட்டத்தை கைவிட்ட மக்கள், 6 கி.மீ.தூரத்திற்கு சாலை போடப்படக்கூடிய இடத்தில் 3 கி.மீ. மதுரை மாவட்டத்திலும், 3 கி.மீ. தேனி மாவட்டத்திலும் வருவதால் எல்லை பிரச்சனையை மையமாக வைத்து அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், வனச்சரக அலுவலரை சந்தித்து முறையிட்டு பலன் கிடைக்காவிட்டால், மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications