மோடியை மதுரையில் சந்தித்த ஓபிஎஸ் அணி.. காரணம் தெரியுமா?
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் தனி அணி எம்எல்ஏக்களுடன் சந்தித்து பேசினார்.
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு மதுரை திரும்பிய பிரதமர் மோடியை விமான நிலையத்தில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், நீட் தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்கக் கோரியும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

கச்சத்தீவு மற்றும் இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்துவது குறித்தும் பிரதமரிடம் பேசினேன். தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினோம் என்றும் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே டெல்லி சென்று பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ராமேஸ்வரம் வந்த பிரதமரை தனது அணி எம்.பி, எம்எல்ஏக்களுடன் நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications