தமிழகத்தில் பாக். உளவு அமைப்புகள் செயல்படுகின்றன: முரளிதர் ராவ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் செயல்படுவதாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முரளிதர்ராவ் கூறியதாவது:

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு தவறிவிட்டது. இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும், மோடி அரசின் பெருமைகளையும் விளக்கி வாக்கு சேகரிப்போம்.
இவ்வாறு முரளிதர்ராவ் கூறினார்.












Click it and Unblock the Notifications