கலெக்டர் அலுவலக லட்சணம்... பாதியில் நின்ற லிப்ட்.. மாட்டிக் கொண்ட 2 பேர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியிலேயே நின்று விட்டதால் அதில் இருந்த இரண்டு பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கிவரும் கனிமவளத்துறை அலுவலகத்திற்கு, தூத்துக்குடியை அடுத்துள்ள தட்டாப்பாறையை சேர்ந்த வேலப்பன் மற்றும் ராஜன் ஆகியோர் செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற லிப்ட் இரண்டாவது தளத்திற்கும் மூன்றாவது தளத்திற்கும் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றுவிட்டது. இதனையடுத்து லிப்ட்டில் சிக்கிய இருவரும் கதவுகளை தட்டியும் சத்தம் எழுப்பியதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர் சுடலைமுத்து லிப்டை சிக்கியவர்களை மீட்டனர்.
இது குறித்து லிப்ட்டில் மாட்டிக்கொண்ட வேலப்பன் கூறுகையில், மூன்றாவது தளத்திற்கு சென்றபோது இடையில் லிப்ட் நின்றுவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் சுமார் அரைமணி நேரத்திற்கு பின்னர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications