ஜூலை முதல் மூவர்ணத்தில் வாக்காளர் அடையாள அட்டை: பிரவீன்குமார்
சென்னை: தமிழகத்தில் வண்ணத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி ஜூலை மாதம் துவங்க உள்ளதாக பிரவீன் குமார் கூறினார்.
இது குறித்து சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இந்தியாவில் சில இடங்களில் வாக்காளர்களுக்கு வண்ணத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் வண்ண வாக்காளர் அட்டைகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்துள்ளோம். ஆனால், அதற்காகும் செலவுத் தொகை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஒரு அட்டைக்கு ரூ.2.10 என்ற வீதத்தில் கருப்பு வெள்ளை அட்டைகளை தயாரித்தோம். கலர் அட்டை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான குறிப்பாணைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஓட்டுநர் உரிமம் போல் கலர் அட்டைகள் இருக்கும்.
போலி அட்டைகள் தயாரிப்பதை தடுப்பதற்காக ஹோலோகிராம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் அளிக்கப்பட்டு இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களின் மூலம் 12 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
எனவே, 12 லட்சம் வாக்காளர்களுக்கும், புதிதாக அடையாள அட்டை வாங்க விண்ணப்பிப்பவர்களுக்கும் வாக்காளர் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். இந்தப் பணிகள் ஜூலை இறுதியில் தொடங்கும்" என்று பிரவீன்குமார் கூறினார்.
-
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications