மணல் குவாரிகளை மூட 6 மாத அவகாசம் ஏன்? உடனே இழுத்து மூடுங்கள்: ராமதாஸ் #sandquarry
மணல் குவாரிகள் மூடும் நீதிமன்ற உத்தரவை ராமதாஸ் ட்விட்டரில் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டுள்ளதை வரவேற்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மணல் மாஃபியாக்களின் கொள்ளையத் தவிர்க்கவும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மணல் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த உத்தரவை வரவேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். ஆறுமாதத்தில் மணல் குவாரிகள் அனைத்தையும் மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கதே என்று அந்த செய்தியில் தெரிவித்து உள்ளார்.
மணல் குவாரிகளை மூட 6 மாதங்களுக்கு காத்திருக்கத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்பதால் உடனடியாக மூட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 29, 2017
மேலும், மணல் குவாரிகளை மூட ஆறு மாதம் காத்திருக்கத் தேவையில்லை என்றும், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்க அனுமதி அளித்து உள்ளதால் இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றத்தின் ஆணை வரவேற்கத்தக்கது.
— Dr S RAMADOSS (@drramadoss) November 29, 2017












Click it and Unblock the Notifications