For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரியில் மலர், காய்கறி மையம் அமைக்க ஜி.கே. மணி கோரிக்கை - வீடியோ
கிருஷ்ணகிரியில் மலர் மற்றும் காய்கறிக்கென்று மையம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி: மலர் மற்றும் காய்கறி மையம் ஒன்றை கிருஷ்ணகிரியில் அமைக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிறைந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையைப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேஆர்பி அணையில் நீர் நிரம்பி, உபரி நீர் கடலில் வீணாகச் சென்று கலக்கிறது. இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரியில் மலர் மற்றும் காய்கறி மையம் ஒன்று அமைக்க அரசு முன்வர வேண்டும்" எனக் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர்கள் மற்றும் காய்கறி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனைப் பாதுகாக்கும் குளிர் கிடங்குகள் வேண்டும் என விவசாயிகள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
PMK leader G.K. Mani asked the government to set up flower and veg center at Krishnagiri
Story first published: Wednesday, August 23, 2017, 18:27 [IST]