ரூ. 5000 லஞ்சம் கேட்டு மிரட்டல்... கலெக்டரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தைத் தாக்கிய போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: பொய் வழக்குப் போடாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தினரை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மோகன். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Police attack family in Salem

இந்நிலையில் மோகன் மீது மேலும் சில வழக்குகளை பதிவு செய்யப்போவதாக அம்மாபேட்டை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதுபோன்ற பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அவர்கள் நிர்பந்தித்தாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர், பொய் வழக்குப் போடப்போவதாக மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், மோகனின் செல்போனை பறித்து உடைத்ததாகவும், பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+