கையில் லத்தியுடன் பெண்கள், குழந்தைகளை தரதரவென இழுத்துச் செல்லும்போலீசார்… கோவையில் பதற்றம்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை தரதரவென போலீசார் இழுத்துச் சென்றனர். வலுகட்டாயமாக வெளியேற்றுவதை மறுத்து போராட்டக்காரர்கள் தொடர் முழக்கம் செய்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கோவை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கடந்த 6 நாட்களாக பெண்கள், மாணவிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

நேற்று ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவினர் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்துவிட்டதால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் செய்வோம் என்று தொடர்ந்து போராட்டக்களத்தில் அமர்ந்திருந்தனர்.

Police clear women and children in Coimbatore

இந்நிலையில், இன்று காலையில் இருந்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள், பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை போலீசார் லத்தியுடன் தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், கதறி அழுதனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போலீசார் வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை இழுப்பதும், போராட்டக்காரர்கள் வெளியேற மறுப்பதும் என இந்த கோவை வ.உ.சி மைதானமே ஒரு போராட்ட பூமியாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+