முதல்வர் பழனிச்சாமி இல்லம் முன்பு போராட்டம் நடக்க வாய்ப்பு.. அதிக அளவில் போலீஸ் குவிப்பு
சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் 100க்கும் அதிகமானோர் உயிருக்கு போராடியபடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். முக்கியமாக அதிமுக தலைவர்கள் மீதும் மத்திய அரசு மீதும் கோபத்தில் உள்ளனர். பெயருக்கு கூட அதிமுக கட்சியை சேர்ந்த யாரும் இதுவரை தூத்துக்குடி மக்களை சென்று பார்க்கவில்லை.
இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கிறது. சென்னையிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு முன் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில போராட்ட அமைப்புகள், கட்சிகள் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications