கோவையிலும் ஒரு நிர்மலா தேவி... மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் வற்புறுத்திய கொடுமை
கோவையில் மகளிர் தங்கும் தனியார் விடுதியில் மாணவிகளை மது அருந்தவும் நெருங்கி பழகவும் விடுதி காப்பாளர் ஒருவர் வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.
Recommended Video

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மாணவிகளை விடுதி காப்பாளர் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக புகார் எழுந்துள்ளது.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
ஜெகன்னாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பவர் புனிதா. விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி புனிதா அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

மதுபோதையில் புனிதா
மாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் புனிதா மதுபோதையிலேயே இருப்பதாக மாணவிகள் கூறுகின்றனர்.

பெற்றோருக்கு தகவல்
அப்போது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.

வழக்கு பதிவு
இதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகன்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பரபரப்பு
இருவரையும் பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் இரு தனிப்படைகள் அமைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டையில் ஒரு கல்லூரி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி, அவரது மாணவிகளை பல்கலைக்கழக உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதையடுத்து புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications