நெல்லித்தோப்பை வென்ற நாராயணசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி : நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதலமைச்சர் நாராயணசாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நெல்லித்தோப்பு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றத. இதில் அதிமுக வேட்பாள்ர் ஓம்சக்தி சேகரை தோற்கடித்து நாராயணசாமி 11 அயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது இந்த வெற்றிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாராயணசாமியின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் அவர் சிறுபான்மையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமியின் வெற்றியையொட்டி புதுச்சேரியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications