தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி?
தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின் போதே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 24ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி தமிழக அரசின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications