முத்தூட் மினி பைனான்ஸ் மேனேஜர் ரூ. 40 லட்சம் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தோடு தலைமறைவு
செங்கோட்டை: செங்கோட்டையில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
செங்கோட்டை பேருந்து நிலையம் எதிரே கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மேலாளராக செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தீடீர் என வேலைக்கு செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழுவினர் அங்கு வந்து இருப்பில் இருக்கும் அடகு நகைகளை சோதனை செய்ததில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஏலத்திற்கு விடப்பட வேண்டிய நகைகளையும், ரொக்கம் ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. இதை மேலாளர் சங்கர் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நிறுவனத்தின் அனுமதியோடு மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மேலாளர் சங்கருக்கு நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதும், அதன் காரணமாக நிறுவனத்தின் தலைமையை மிரட்டும் எண்ணத்தில் தங்க நகைகளையும், பணத்தையும் அவர் எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாளர் எடுத்துச் சென்ற நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications