ஆளுநரை புகழ்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள்... புதுச்சேரி சட்டசபையில் பெரும் அமளி
புதுச்சேரி மாநில ஆளுநரை சட்டசபை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகழ்ந்து பேசியதால் அமளி ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. அதில், ஆளுநர் கிரண்பேடியை புகழ்ந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதால் அமளி ஏற்பட்டது.
அமளியைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநரை யாரும் விமர்சிக்கவும் வேண்டாம், புகழ்ந்து பேசவும் வேண்டாம் என்று கூறினார்.

முதல்வர் பேச்சுக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கும் கண்டனம் தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசவிடாமல் தடுத்து வருகிறார்கள் என்றும், அதனால் ஜனநாயக மாண்புகள் இல்லாமல் அவை நடப்பதாக என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications