ராஜபாளையத்தில் 18 நாட்களில் 16 பேர் பலி: பரவும் 'டெங்கு?'- 3 அமைச்சர்கள் முகாம்
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 நாட்களில் 16 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் அடுத்தடுத்து பலியாவதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க மூன்று அமைச்சர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ராஜபாளையத்தில் முகாமிட்டுள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 18 நாட்களில் மட்டும் 15 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சல் என்றால் பீதி அதிகரிக்கும் என்பதால் வைரஸ் காய்ச்சல் என்றும் மர்ம காய்ச்சல் என்றும் அதிகாரிகள் சமாளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் 35வது வார்டைச் சேர்ந்த சரவணன் என்பவரின் 4 வயது மகள் அனு, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். தங்கள் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதால்தான், பெருமளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தாக்குதல் அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொசுக்களின் உற்பத்தியிடமாகத் திகழும் கொண்டனேரி கண்மாயை சுத்தப்படுத்தக்கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தென்காசி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கண்மாயை சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்கப்பட்ட பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் களைந்து சென்றனர்.
போர்க்கால நடவடிக்கை
இதனிடையே ராஜபாளையத்தில், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.
அமைச்சர்கள் முகாம்
வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகிய மூவரும் ராஜபாளையத்தில் முகாமிட்டிருப்பதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முகாம்
மேலும், கொசுக்கள் அதிகமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 11 வார்டுகளில், தலா ஒருவர் வீதம் 11 நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவக்குழுக்கள் ஆய்வு
5 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடுதோறும் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications